Friday, March 29, 2024
Home » மர்ம வைரஸ் பாதிப்பு பற்றி சுகாதார ஸ்தாபனம் விளக்கம்

மர்ம வைரஸ் பாதிப்பு பற்றி சுகாதார ஸ்தாபனம் விளக்கம்

by Rizwan Segu Mohideen
November 29, 2023 5:41 pm 0 comment

சீனாவில் சுவாச நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கொவிட்–19 நெருக்கடி நிலையின்போது ஏற்பட்டதைபோன்று மோசமானதல்ல என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புதிய, வழக்கத்துக்கு மாறான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அது கூறியது.

கொவிட்–19 கட்டுப்பாட்டின்போது சிறுவர்கள் சில வைரஸ் வகைகளிடமிருந்து பாதுகாக்கப்பட்டனர்.

தற்போது அந்த வைரஸ்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் வைரஸ் தொற்று தயார்நிலை, தடுப்புப் பிரிவின் தற்காலிக பணிப்பாளர் டொக்டர் மரியா வேன் கெர்கோவே தெரிவித்தார்.

சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களில் பெரும்பாலானோர் சளிக்காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டிருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கூறியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT