Thursday, March 28, 2024
Home » இலங்கை வந்தார் போதகர் ஜெரோம் பெனாண்டோ

இலங்கை வந்தார் போதகர் ஜெரோம் பெனாண்டோ

- 48 மணி நேரத்திற்குள் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

by Prashahini
November 29, 2023 11:21 am 0 comment

போதகர் ஜெரோம் பெனாண்டோ இன்று (29) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போதகர் ஜெரோம் பெனாண்டோ கட்டார் ஏர்லைன்ஸில் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் அவர் 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்க உள்ளார்.

ஜெரோம் பெனாண்டோ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வரும் போது அவரை கைது செய்ய வேண்டாம் எனவும் அவர் இலங்கை வந்ததும், 48 மணி நேரத்திற்குள் அவரிடம் வாக்குமூலம் பெறுமாறும் சிஐடிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT