Thursday, March 28, 2024
Home » நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 34 கி.கி. கஞ்சா மீட்பு; ஒருவர் கைது

நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 34 கி.கி. கஞ்சா மீட்பு; ஒருவர் கைது

- பெறுமதி சுமார் ரூ. 13 மில்லியன் என மதிப்பீடு

by Prashahini
November 29, 2023 10:12 am 0 comment

யாழில் நிலத்தில் புதைத்து வைத்திருந்த சுமார் 34 கிலோ கேரளா கஞ்சாவை, நேற்று (28) மீட்ட பொலிஸார் , அதனை புதைத்து வைத்தார் எனும் சந்தேகத்தில் 24 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் கடற்கரையை அண்டிய பகுதியில் கஞ்சா புதைத்து வைத்திருப்பதாக மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை செய்தனர்.

அதன் போது 3 பரல்களில் 17 பொதிகளாக கஞ்சா நிலத்தில் புதைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 13 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது .

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT