Friday, March 29, 2024
Home » மின்சாரம் தாக்கி 26 வயது இளைஞன் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி 26 வயது இளைஞன் உயிரிழப்பு

- மின்கம்பியில் ஏற்பட்ட சேதம் காரணமாக அனர்த்தம்

by Prashahini
November 28, 2023 2:08 pm 0 comment

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளராக கடமையாற்றிய இளைஞரொருவர் அலுவகத்தில் மின்சாரம் தாக்கி இன்று (28) உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த 26 வயதான கஜந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அலுவகத்தில் பணியிலிருந்தவேளை , தண்ணீர் வராததால் , தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக சென்ற வேளை, அங்கிருந்த மின்கம்பியில் ஏற்பட்ட சேதம் காரணமாக மின்சாரம் தாக்கியுள்ளது.

அதனை அடுத்து அலுவகத்தில் கடமையில் இருந்த ஏனையவர்கள் இளைஞனை மீட்டு , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT