Thursday, March 28, 2024
Home » தங்கோவிட்ட இறப்பர் தொழிற்சாலையில் பாரிய தீ

தங்கோவிட்ட இறப்பர் தொழிற்சாலையில் பாரிய தீ

by Rizwan Segu Mohideen
November 28, 2023 10:18 am 0 comment

மீரிகம – தங்கோவிட்ட இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த இறப்பர் தொழிற்சாலையில் நேற்றிரவு 9.20 மணியளவில் பரவிய குறித்த தீயை இன்று காலை வரை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரர முடியாமல் போயுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சாலையின் இரவு நேர பணிபுரியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், கம்பஹா தீயணைப்பு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரசாயனப் பொருட்கள் காணப்பட்ட பகுதியிலேயே தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலினால் உயிர் சேதங்கள் பதிவாகவில்லை என்பதோடு, இது தொடர்பான இழப்புகள் இதுவரை மதிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், தங்கோவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT