Thursday, March 28, 2024
Home » வீட்டினுள் நுழைந்த திருடனை மடக்கிப்பிடித்த சுகாதார பரிசோதகர்

வீட்டினுள் நுழைந்த திருடனை மடக்கிப்பிடித்த சுகாதார பரிசோதகர்

- திருடனை மரத்துடன் கட்டிவைத்து நையப்புடைத்த குடும்பம்

by Prashahini
November 27, 2023 4:49 pm 0 comment

வவுனியாவில் வீட்டினுள் நுளைந்து திருடமுற்பட்ட நபர் ஒருவரை மடக்கிப்பிடித்த சுகாதார பரிசோதகர் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று (27) அதிகாலை 2.00 மணியளவில் வவுனியா, தாண்டிக்குளம், சோயா வீதியில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தாண்டிக்குளம், சோயா வீதி பகுதியில் உள்ள குறித்த வீட்டிற்குள் திருடன் ஒருவன் நுழைய முற்பட்டதை வீட்டின் உரிமையாளரான சுகாதார பரிசோதகர் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து சுதாகரித்துக் கொண்ட சுகாதார பரிசோதகரும் அவரது குடும்பத்தினரும், திருடனை மடக்கிப்பிடித்து மரத்துடன் கட்டிவைத்து நையப்புடைத்துள்ளனர்.

பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதுடன், திருடனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவத்தில் திருடன் கத்தியால் தாக்கியதில் சுகாதார பரிசோதகருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளதுடன், அவரது சகோதரரான ஊடகவியலாளர் ஒருவருக்கும் சிறுகாயம் ஏற்ப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட நபர் மீது நீதிமன்றில் வேறு வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT