Thursday, March 28, 2024
Home » பருத்தித்துறை வாள்வெட்டில் இளைஞன் படுகாயம்

பருத்தித்துறை வாள்வெட்டில் இளைஞன் படுகாயம்

- தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தப்பியோட்டம்

by Prashahini
November 27, 2023 10:00 am 0 comment

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில், நேற்று முன்தினம் சனிக்கிழமை (24) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பருத்தித்துறை , கந்தவுடையார் வீதியை சேர்ந்த 23 வயதான ஜெயசந்திரன் டிலக்சன் என்பவரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் வீதியில் சென்று கொண்டிருந்த வேளை அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இருவர் , இளைஞனை வழிமறித்து வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT