Thursday, March 28, 2024
Home » வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு; பெருமளவான பொலிஸார் குவிப்பு

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு; பெருமளவான பொலிஸார் குவிப்பு

- யாழ். நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு

by Prashahini
November 24, 2023 11:08 am 0 comment

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தை சூழ பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு , சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் உயிரிழப்பு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்றில் இன்று (24) இடம்பெற்ற நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இளைஞன் உயிரிழந்தது , யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால் , கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

கடந்த திங்கட்கிழமை இளைஞனின் உடற்கூற்று பரிசோத்னை யாழ்.போதனா வைத்திசாலையில் மேற்கொள்ளப்பட்ட போது , நீதவான் நேரில் என்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று , சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகஸ்தர்களிடமும் வாக்கு மூலங்களை பெற்று இருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று மன்றில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்ற பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT