கெப்பித்திகொள்ளாவ கல்வி வலயத்திற்குட்பட்ட ஹொரவப்பொத்தான அங்குநொச்சிய அல்மாஸ் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 2023 வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 11 மாணவர்கள் வெட்டுபுள்ளிகளுக்கு மேல்பெற்று வலயத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் முதலாம் இடத்தையும் அநுராதபுரம் மாவட்டத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் இரண்டாம் இடத்தையும் பெற்று சித்தியடைந்துள்ளதாக வித்தியாலய அதிபர் ஏ.எம். இஷாக் தெரிவித்தார். அதனடிப்படையில் என்.ஹுஸ்னா 170, ஆர்.ரிப்தா 165, ஏ.எம்.ஏ.முயீஸ் 163, ஏ.எச்.அன்ஹா 152, ஆர்.எம்.ஹஸ்ஸான் 151, ஏ.எஸ்.ஹுசைன் 149, எம்.ஆர்.ராசிக் 148, எம்.ஆர்.ருகையா 148, எம்.எம்.முபீத் 147, ஏ.ஜே.எம்.ருஸ்தி 146, ஏ.எப்.அஸ்ரா 143, ஆகியோரையும் அதிபர் ஏ.எம்.இஷாக் முன்னாள் அதிபர் ஏ.ஜே.எம்.தெளபீக் பொறுப்பாசிரியர்களான ஏ.ஆர்.யாசீர், எம்.பெனோரிஸா உள்ளிட்டோரை படத்தில் காணலாம்.
(அநுராதபுரம் மேற்கு தினகரன், திறப்பனை தினகரன் நிருபர்கள்)