மத்திய மாகாண கைத்தொழில் அபிவிருத்தி வர்த்தக வாணிப அமைச்சின் ஏற்பாட்டில் கித்துள் மற்றும் கித்துள் சார்ந்த உற்பத்தி பொருட்கள் கண்காட்சி கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கித்துள் வெல்லத்துக்கு பெரும் கிராக்கி காணப்படுகின்றது. அதன் தரம், சுவை, குணம் பற்றி அதிகமானவர்கள் அறிந்திருக்க முடியாது.
பனை வெல்லத்ததை விட பன்மடங்கு செயற்திறனும், சுவையும் கொண்டது. கித்துள் வெல்லம் அல்லது கித்துள் பாணி சேர்கப்பட்ட உணவுகளின் சுவை மற்றும் தரம் ஈடுசெய்யமுடியாதது. இருப்பினும் கித்துள் கைத்தொழில் மத்திய மலைநாட்டில் மட்டுமே பிரபல்யமடைந்துள்ளது.
இதனை பிரபல்யப்படுத்தும் வகையிலேயே இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே ஆரம்ப வைபவத்தில் கலந்து கொள்வார். எதிர்வரும் 24ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கண்காட்சி திறந்துவைக்கப்படவுள்ளதுடன் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.
(அக்குறணை குறூப் நிருபர்)