பேருவளை, சீனன்கோட்டை ‘முத்துக்கள் வட்ஸ்அப்’ குழுமத்தின் ஏற்பாட்டில் தாதிகள் பயிற்சி கருத்தரங்கு அண்மையில் நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியின் மாநாட்டு மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இக்கருத்தரங்கில் வளவாளர்களாக டாக்டர் மரீனா ரிபாய், டாக்டர் பிர்தவ்ஸியா நியாஸ் மற்றும் டாக்டர் நியாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை அதிபர் எம். இப்றாஹீம், நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி அதிபர் ஜனாபா பஹீமா பாயிஸ் ஆகியோர் உட்பட இரு பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள், குழும அங்கத்தவர்களும் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் சார்பில் குழுமத் தலைவர் மொஹமட் ராமிஸ் தெரிவித்தார்.