112
முப்படை முழுமையான ஒத்துழைப்பு
அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்ததையடுத்து, பாதுகாப்புப் படையினர் கடமை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
நேற்றுமுன்தினம் 3.00 மணி வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் 8.6 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை தனியார் மயமாக்குதல் மற்றும் வேலைப் பாதுகாப்பு உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகள் தொழிற்சங்கம் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுத்திருந்தது.
இலங்கையின் தெற்கு, கட்டுநாயக்க மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.