Friday, April 26, 2024
Home » இ.போ.ச. பாதுகாப்பு, விசாரணை பிரிவுக்கு புதிய அதிகாரி நியமனம்

இ.போ.ச. பாதுகாப்பு, விசாரணை பிரிவுக்கு புதிய அதிகாரி நியமனம்

by sachintha
November 24, 2023 7:59 am 0 comment

அமைச்சர் பந்துலவினால் நியமனக் கடிதம் கையளிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபையின் பாதுகாப்பு மற்றும் விசாரணை மேற்பார்வை அதிகாரியாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஏ.எல்.அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவருக்கான நியமனக் கடிதம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சில் நேற்று (23) வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிலையில், தனது நியமனக் கடிதத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டார்.

இந்தப் புதிய நியமனத்தின் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபையின் பாதுகாப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் வினைத்திறனுடன் அமுல்படுத்தப்படுவதுடன், தனியார் பஸ்களால் இலங்கை போக்குவரத்து பஸ்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் கும்பல்களால் நடத்தப்படும் தாக்குதல்கள், ஊழல்கள் தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இ.போ.ச. இல் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக இ.போ.ச. ஒழுக்காற்றுச் சட்டத்தின் பிரகாரம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கும் கண்காணிப்பதற்கும் சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்வதற்கும் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை இ.போ.ச. நிர்வாகத்துக்கு வழங்குவதே அவருக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளாகும்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர், பொறியியலாளர் எஸ்.எம்.டி.எல்.கே.அல்விஸும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT