Friday, March 29, 2024
Home » ஆற்றில் மீன்பிடிக்க சென்ற தந்தை, மகன் நீரில் மூழ்கி பலி

ஆற்றில் மீன்பிடிக்க சென்ற தந்தை, மகன் நீரில் மூழ்கி பலி

-கல்கமுவவில் சம்பவம்

by sachintha
November 24, 2023 7:46 am 0 comment

கல்கமுவ பிரதேசத்திலுள்ள சியம்பலான்கமுவ ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய தந்தையும் 20 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, தந்தை ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதாகவும் இவரைக் காப்பாற்றுவதற்கு ஆற்றில் குதித்த மகனும் நீரில் மூழ்கியதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT