Thursday, March 28, 2024
Home » 13 வயது பாடசாலை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; இளைஞன் கைது

13 வயது பாடசாலை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; இளைஞன் கைது

- டிசம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில்

by Prashahini
November 23, 2023 3:13 pm 0 comment

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரத்தில் வசிக்கும் 13 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சனிக்கிழமை (18) பாடசாலை சென்ற சிறுமியை காணவில்லை என தாயாரால் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று முன்தினம் (21) முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியில் சிறுமியையும், இளைஞனையும் கைது செய்துள்ளதுடன் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனைகளில் சிறுமி பாலியல் துஷ்பியோகம் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து இளைஞனை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது டிசம்பர் 5ஆம் திகதி வரை இளைஞனை விளக்கமறியல் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT