Thursday, March 28, 2024
Home » நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில் சிறுவன் உயிரிழப்பு

நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில் சிறுவன் உயிரிழப்பு

- மின்னல் தாக்கத்தின் அதிர்ச்சியால் ஏற்பட்ட அனர்த்தம்

by Prashahini
November 23, 2023 9:48 am 0 comment

மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக பாடசாலை மாணவன்  துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

கல்பாத்த, வத்துகொடை பிரதேசத்தில் வசித்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கிய போது பாடசாலை மாணவன் தனது வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்கியதில் மாணவன் அதிர்ச்சியடைந்து நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாணவனின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அங்குருவத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT