Friday, March 29, 2024
Home » நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகலில் மழை

நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகலில் மழை

- சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை

by Rizwan Segu Mohideen
November 23, 2023 7:51 am 0 comment

இன்றையதினம் (23) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென், மேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT