Thursday, March 28, 2024
Home » 13 இலட்சத்து 77 ஆயிரம் வறிய குடும்பங்களுக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று

13 இலட்சத்து 77 ஆயிரம் வறிய குடும்பங்களுக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று

by sachintha
November 23, 2023 6:59 am 0 comment

பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்

செப்டெம்பர் மாதத்துக்கான கொடுப்பனவுகளுக்காக 857 கோடியே 10 இலட்சம் ரூபா திறைசேரியினால் ஒதுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு

செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அஸ்வெசும செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இன்று முதல் வைப்பிலிடப்படவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் சபையில் தெரிவித்தார். இக்கொடுப்பனவுகள் சுமார், 13 இலட்சத்து 77 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இதற்கிணங்க 8571 மில்லியன் ரூபா நிதி வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான கொடுப்பனவு ஜூலை மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இது தொடர்பான கருத்துக்களை முன் வைத்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT