Friday, March 29, 2024
Home » போலி வீசாவுடன் கனடா செல்ல முயன்றவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில்

போலி வீசாவுடன் கனடா செல்ல முயன்றவர் கைது

by mahesh
November 22, 2023 7:40 am 0 comment

போலி விசாவுடன் கனடா செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மெல்சிரிபுர, மதஹபொலவைச் சேர்ந்த 34 வயது பயணி, டுபாய் ஊடாக கனடா செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக நேற்று மாலை விமான நிலையத்துக்கு வந்ததாக குடிவரவு வட்டாரங்கள் தெரிவித்தன.

குடியகல்வு கருமபீடத்திலிருந்த அதிகாரி, பயணியின் கனேடிய விசாவின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகமடைந்து அவரை குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவுக்கு பரிந்துரைத்துள்ளார்.

பயணியின் உண்மையான இலங்கை கடவுச்சீட்டில் ஒட்டப்பட்டிருந்த விசா போலியானதென குடியகல்வு துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவு விசேட சோதனையின் மூலம் கண்டறிந்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT