189
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட, சுங்கப் பணிப்பாளர் பதவியிலிருந்து சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு மேலதிகமாக சுங்க விலை ஆய்வுப்பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சீவலி அருக்கொடவுக்கு, சுங்கக்கொள்கை திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளராக புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது..
இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளராக சீவலி அருக்கொட தொடர்ந்தும் பணியாற்றி வருவார். இவருக்கு கடந்த 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த ப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.