Thursday, March 28, 2024
Home » டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு கிராம மட்ட குழுக்களை ஈடுபடுத்த ஆலோசனை

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு கிராம மட்ட குழுக்களை ஈடுபடுத்த ஆலோசனை

by mahesh
November 22, 2023 9:00 am 0 comment

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக கிராம மட்டக் குழுக்களையும் ஈடுபடுத்த வேண்டுமென, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ஆலோசனை வழங்கினார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (20) நடைபெற்ற யாழ். மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்துதற்கு முதலில் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்க வேண்டுமென்பதுடன், மிக முக்கியமாக கிராம மட்டக் குழுக்களை இதற்கு பயன்படுத்த வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

இதற்கான நடவடிக்கையை பிரதேச செயலர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் முன்னின்று முன்னெடுக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், டெங்கு ஒழிப்புத் திட்டத்துக்கு கிராம மட்டக் குழுக்களை ஈடுபடுத்துவதன் மூலம் டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் தெரிவித்தார்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT