மத்திய மாகாணத்திற்கும், சீனாவின் ஜியாங்சி மாகாணத்திற்கும் இடையே ஒன்றிணைந்த வேலைத்திட்டம் தொடர்பான முதற்கட்ட பேச்சு வார்த்தைகள் நேற்று (20) கண்டியில் இடம்பெற்றன.
இந்நிகழ்வு முதலீட்டு ஊக்கவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் ஏற்பாட்டில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதனுடன் தொடர்புடையதாக தேசிய கைத்தொழில் உற்பத்திகளின் கண்காட்சியும், சீனாவின் ஜியாங்சி மாகாணம் தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் இடம்பெற்றது.
சீனநாட்டு முதலீட்டாளர்கள் பலர் இதில் பங்கு கொண்டனர். ஜியாங்சி மாகாண உதவிச் செயலாளர் திருமதி சூ சொன்குயிங் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் மத்திய மாகாணத்திற்கும், ஜியாங்சி மாகாணத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் காணப்படுவதாகவும், அதனூடாக வர்த்தக மற்றும் பொருளாதார விடயங்களைக் கையாள்வது மிகவும் இலகுவானது என குறிப்பிட்டிருந்தார்.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உட்பட பலர் உரையாற்றினர்.
அக்குறணை குறூப் நிருபர்