194
ரயிலின் மிதிபலகையில் பயணித்துக் கொண்டிருந்தந நால்வர்,சுவரில் மோதப்பட்டதில் காயமடைந்தனர். கொழும்பு கொம்பனித் தெரு ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள சுவரிலே,இவர்கள் மோதப்பட்டனர்.இச்சம்பவம் (20) இடம்பெற்றது.காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.காயமடைந்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.