Friday, March 29, 2024
Home » விளக்கமறியலில் கைதி மரணம்; இரு பொலிஸாருக்கு இடமாற்றம்

விளக்கமறியலில் கைதி மரணம்; இரு பொலிஸாருக்கு இடமாற்றம்

வட்டுக்கோட்டையில் சம்பவம்

by damith
November 21, 2023 6:50 am 0 comment

மல்லாகம் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரின் உயிரிழப்புக்கு,

சிறுநீரகம் பாதிக்கப்பட்டதே காரணமென மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், கடுமையாக துன்புறுத்தப்பட்டதாலே சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சித்தன்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 25) எனும் இளைஞனின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து,இவ்விளைஞன்,யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்விளைஞன் உயிரிழந்தார். இதையடுத்து,இவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை உடற்கூற்றுப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பரிசோதனையில்,துன்புறுத்ப்பட்டதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு,பொலிஸாரே உயிரிழப்புக்கு காரணமென தெரியவந்துள்ளது. இதையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT