Thursday, April 25, 2024
Home » குற்றச்சாட்டை நிரூபித்தால் உடன் பதவி விலகுவேன்

குற்றச்சாட்டை நிரூபித்தால் உடன் பதவி விலகுவேன்

கோப் குழு தலைவர் ரஞ்சித்பண்டார எம்.பி

by damith
November 21, 2023 6:40 am 0 comment

எதிர்க்கட்சியினர் சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள கோப் குழு தலைவர் ரஞ்சித்மத்தும பண்டார எம்.பி, சபாநாயகருக்கு எழுத்து மூலமாக இதுபற்றி அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (20) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர்: பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளாத நேரத்தில், தன்மீதும், தன்னுடைய குழுவை சேர்ந்த இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றசசாட்டுக்களை மறுக்கிறேன். என்மீது முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை விசாரணை செய்யுங்கள்.

அது நிரூபிக்கப்பட்டால் உடன் பாராளுமன்ற பதவியிலிருந்து விலகத் தயார். என்மீது குற்றம் சுமத்திய பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதாரன, இக்குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக இனம்காணப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு, கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் கூறினார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT