Thursday, March 28, 2024
Home » 190 புள்ளிகளுடன் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்

190 புள்ளிகளுடன் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்

by damith
November 21, 2023 5:55 am 0 comment

அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இருந்து தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய முஹம்மட் அனஸ் பர்ஹத் பாத்திமா 190 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று வலயம், கல்முனை கல்வி மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் முதல் நிலை பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

பாடசாலை அதிபர் நஜீமா ஹாறுத்தீன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.றகுமத்துள்ளாஹ் முஹம்மட் அனஸ் பர்ஹத் பாத்திமாவை பாராட்டியதுடன் கல்வி கற்பதற்காக அன்பளிப்பு ஒன்றையும் பரிசளித்தார். ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இருந்து இம் முறை தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 29 மாணவிகள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று தெரிவாகியுள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்தில் முதல் நிலை பெற்ற மாணவிக்கு வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர், ஆசிரியர்கள், பாடசாலைச் சமூகம் என்பன வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

(அக்கரைப்பற்று மத்திய நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT