Friday, March 29, 2024
Home » பொத்துவில் மக்களின் நீண்டகால வேண்டுகோள் நிறைவேறியது

பொத்துவில் மக்களின் நீண்டகால வேண்டுகோள் நிறைவேறியது

முஷாரப் எம்.பியின் முயற்சியினால் பொத்துவில் உப பஸ்டிப்போ தரமுயர்வு; அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் வருகை தந்து பங்கேற்பு

by damith
November 21, 2023 6:00 am 0 comment

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் மேற்கொண்ட முயற்சியினால் பொத்துவில் உப பஸ்டிப்போவை பிரதான டிப்போவாக தரமுயர்த்துவதற்கான நிகழ்வு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபின் அழைப்பின் பேரில் பிரதம அதிதிகளாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டு பிரதான பஸ் டிப்போவை திறந்து வைத்தனர்.

கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டபிள்யு. டி. வீரசிங்க, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் பொறியியலாளர் லலித் டி அல்விஸ், தேசிய அபிவிருத்தி மற்றும் கட்டுமானக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பொறியியலாளர் குசான் தேவிந்தா மற்றும் அரசாங்க அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது பொத்துவில் பஸ்டிப்போவுக்கு போக்குவரத்து அமைச்சரினால் நவீன சொகுசு பஸ் வண்டி வழங்கி வைக்கப்பட்டதுடன், 60 மில்லியன் ரூபாய் செலவில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லும் அதிதிகளினால் நாட்டி வைக்கப்பட்டது.

பொத்துவில் உப பஸ்டிப்போவை பிரதான டிப்போவாக தரமுயர்த்துவதற்கான தீர்மானம் கடந்த வருடம் அமைச்சு மட்டத்தில் எட்டப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக பொத்துவில் பஸ் டிப்போவில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திக்கென பணம் ஒதுக்குவதில் பல சிரமங்கள் காணப்பட்டன.

குறித்த காலப்பகுதியில் பொத்துவில் பஸ்டிப்போ அமைந்துள்ள நிலத்தின் சட்டரீதியான உரிமை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக பஸ்டிப்போவுக்காக உரிமம் சட்டரீதியாக வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பஸ்டிப்போவின் துரித அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான முதற்கட்ட நிதியாக சுமார் 60 மில்லியன் ரூபா பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் விடுத்த வேண்டுகோளுக்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த பணிப்புரைக்கமைய ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பக் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பஸ்டிப்போவாக தரமுயர்த்தும் நிகழ்வில் அதிதிகள் கோலாகலமாக அழைத்து வரப்பட்டதுடன் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அத்தோடு அதிதிகள் இங்கு நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

பொத்துவில் பிரதேசத்திலுள்ள நிறுவனங்கள், பொதுஅமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் அமைப்புகள், பள்ளிவாசல்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஊரின் விழாவாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

பொத்துவிலுக்கான உப பஸ்டிப்போவை பிரதான டிப்போவாகத் தரமுயர்த்தித் தருமாறு அம்பாறை மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பல ஆண்டுகளாக பொத்துவில் மக்கள் கோரிக்கை முன்வைத்திருந்தபோதும் அக்ேகாரிக்ைக இதுவரை நிறைவேறாமலிருந்தது. இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப்பிடம் இவ்விடயத்தை மக்கள் முன்வைத்திருந்தனர். அதனையடுத்து மக்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டிருந்தது.

எஸ்.எம். அறூஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT