Thursday, March 28, 2024
Home » விழிகள் கலா முற்றத்தால் சிரேஷ்ட கலைஞர்கள் கௌரவிப்பு

விழிகள் கலா முற்றத்தால் சிரேஷ்ட கலைஞர்கள் கௌரவிப்பு

by damith
November 21, 2023 5:55 am 0 comment

மன்னாரில் விழிகள் 10 வது நிறைவாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) பேசாலையில் சங்கவி தியேட்டர்ஸ் அன்ட் பிலிம்ஸ் அனுசரணையுடன் விழிகள் கலா முற்றத்தின் ‘கலை விழி’ விருது மற்றும் கலாவிபூஷணம் பெற்ற கலைஞர் மற்றும் ஊடகவியலாளர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு பேசாலை சங்கவி திரையரங்கில் நடைபெற்றது.

பேசாலை மூத்த கலைஞர்களான சூசை ஞானப்பிரகாசம், லெம்பேட் மற்றும் திரு. செபமாலை விக்ரர் ஜெயபாலன் பர்ணாந்து ஆகியோருக்கு ‘கலை விழி’ விருதும்

கலாவிபூஷணம் பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் எல்.கொன்சால் வாஸ் கூஞ்ஞ , ஓய்வுநிலை அதிபர் சீ.எம்.சேவியர் பர்னாந்து , ஓய்வுநிலை ஆசிரியர் எஸ்.ஏ.உதயன் , செல்வி டிவன்சி மாக்கஸ் , புகைப்பட கலைஞர் என் நியூட்டன், எ.சுகந்தன் ரூபன் கூஞ்ஞ மற்றும் தேசகீர்த்தி விருது பெற்ற ஏ.மெடோசன் பெரேரா ஆகியோர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் , மன்னார் பிரஜைகள் குழு உப தலைவர் மன்னார் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.சபூர்தீன் , பேசாலை உதவி பங்குத் தந்தை அருட்பணி அல்பன்ராஜ் அடிகளார் என பலர் கலந்து கொண்டனர்.

(தலைமன்னார் விஷேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT