Friday, March 29, 2024
Home » பசுபிக் வான் மாநாட்டில் இலங்கை விமானப்படை தளபதி பங்கேற்பு

பசுபிக் வான் மாநாட்டில் இலங்கை விமானப்படை தளபதி பங்கேற்பு

by damith
November 21, 2023 10:06 am 0 comment

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கடந்த 13 தொடக்கம் 16ம் திகதி வரை ஹவாய் பேர்ல் துறைமுகத்தில் அமைந்துள்ள பசுபிக் விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற 2023ம் ஆண்டுக்கான பசுபிக் வான் பிரதானிகளின் மாநாட்டில் கலந்துகொண்டார்.

22 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாடு வான் பிரதானிகள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஒன்றுகூடும் மிகப்பெரிய ஒரு கலந்துரையாடல் நிகழ்வாகும். இதன்போது பிராந்திய பாதுகாப்பு சவால்களை சமாளிக்க உலகளாவிய உளவுத்துறையை பயன்படுத்துவது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. விமானப்படைத் தளபதியும் பசிபிக் விமானத் தளபதிகள் மாநாட்டின் தொகுப்பாளருமான ஜெனரல் கென் வில்ஸ்பாக் தலைமையில் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதன்படி, வான்வெளி விழிப்புணர்வு முக்கியத்துவம், அண்மைக்கால மோதல்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

அந்த கலந்துரையாடல்களுக்கு மேலதிகமாக, சர்வதேச பங்காளிகளுக்கிடையிலான உறவுகளை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஈடுபாடுள்ள சமூக நிகழ்வுகளும் மாநாட்டில் இடம்பெற்றன.

இந்தோ-பசிபிக், ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளின் இராணுவத் தலைவர்களை ஒன்றிணைத்த இந்த மாநாடு, பிராந்திய சவால்களுக்கு தீர்வு காணவும், கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும் ஒரு அடித்தளமாகவும் செயற்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT