சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தரால் வடிக்கப்பட்டு, பர்மாவைச் சேர்ந்த ஊ.பா. கின்னிடமிருந்து கற்று, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் விபாசனா கற்று தந்த ச. கோயங்காவால் நடத்தப்படும் விபஸ்ஸனா தியான முறை பற்றி அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.
குருஜி எஸ்.என் கோயங்காவின் வழிவந்த தியான ஆசிரியர்கள், மோகன் ராமசந்திரன், திருமதி ஜானகி சுப்பிரமணியம் மற்றும் சிறுவர்களுக்கான தியான ஆசிரியர்கள் பாலசந்திரன் கிருஸ்ணமூர்த்தி, சரவணன் செல்வராஜ், திருமதி.சத்யவாணி முருகன் ஆகியோர் ஒன்றிணைந்து தமிழ், ஆங்கில மொழிகளில் டிசம்பர் 5 முதல் 16ம் திகதி வரை பத்து நாட்களுக்கான விபஸ்ஸன தியான வதிவிடப்பயிற்சிகளை வழங்கவுள்ளனர். இவர்களது பயிற்சிநெறியில் கலந்து கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனைத்து தியான நிகழ்ச்சிகளும். உணவும், தங்குமிடவசதியும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம், பாத்திமா ரிட்ரீட் ஹவுஸ் பண்டதரிப்பு இடத்தில் இப்பயிற்சி நடைபெறவுள்ளது. மனத்தூய்மைக்கான இந்த தியான பயிற்சி நெறியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
மேலும் தகவல்களுக்கு 0773504491, 0716439454 தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
எச். எச். விக்கிரமசிங்க