கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இவ்வருட ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் தேசிய வருமான வரி திணைக்களத்தின் வரி வருமான நிலுவை, 943 பில்லியன் ரூபா என கோபா குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வருமான வரி திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் கோபா குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலிலே, இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி முதல் இவ்வருடத்தின் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் தேசிய வருமான வரி திணைக்களத்தின் வரி வருமான நிலுவை, 943 பில்லியன் ரூபா என்றும் அதில் 39 பில்லியன் ரூபா இம் மாதத்தின் முதல் 7 மாதங்களில் வருமான வரி நிலுவையாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரி அறவிட வேண்டியவர்களிடமிருந்து முறையாக அதனை அறவிடுவது தொடர்பில் வருமான வரி திணைக்களம் தற்போது பல்வேறு செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)