Friday, March 29, 2024
Home » நாட்டின் போக்குவரத்து அமைப்புகள் மின் வலுசக்தி முறைக்கு மாற வேண்டும்

நாட்டின் போக்குவரத்து அமைப்புகள் மின் வலுசக்தி முறைக்கு மாற வேண்டும்

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன

by damith
November 20, 2023 11:52 am 0 comment

நாட்டின் போக்குவரத்து அமைப்புகள் மின் வலுசக்தி முறைக்கு மாற வேண்டும் என்பது காலத்தின் தேவையாகுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 16ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு மோட்டார் வண்டிகள் கண்காட்சி (Colombo motor show ) 2023 கூடத்தை ஆரம்பித்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கண்காட்சியின் ஆரம்ப நாளில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டார்.

இவ் ஆண்டு கண்காட்சியில் இறக்குமதி செய்யப்பட்ட மின்சார வாகனங்கள், கார் உதிரிப்பாகங்கள் கொண்ட காட்சிக்கூடங்கள் மற்றும் இராணுவம் மற்றும் கடற்படையால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் யுத்த தாங்கிகள் மற்றும் ஜீப்புகள் உள்ளிட்ட பல வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கண்காட்சியின் பல சிறப்புக் காட்சிக்கூடங்கள் அமைச்சரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கிருந்த வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் அவர் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

‘உலகம் முழுவதும் வாகனத் துறையில் பல புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் தற்போது காணப்படுகின்றன. புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, கலப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட மாற்று வலுசக்தி அமைப்புகளுக்கு உலகம் மாறி வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT