கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட காரியாலையத்துடன் இணைந்து அக்கரைப்பற்று கலை இலக்கியப் பேரவை நடத்திய கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு (18) சனிக்கிழமை நடைபெற்றது.
பேரவையின் தலைவர் ஊடகவியலாளர் கலா பூஷணம் மீரா இஸ்ஸத்தின் தலைமையில் அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் (18) நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ,எல்,எம்,அதாஉல்லா கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவலர் திணைக்கள பணிப்பாளர் எஸ்.நவநீதன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.ஜெகதீசன் மற்றும் பிரதேச செயலாளர் டி.எம்.அன்சார் உதவி பிரதேச செயலாளர் வை.ராசிக், சட்டத்தரணி நஹீஜா முஸாபீர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்தியர் டி.எஸ்.ஆர்.தாசிம் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜவ்பர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கௌரவம் பெற்ற கலைஞர்களை படங்களில் காணலாம்.
(திராய்க்கேணி தினகரன் நிருபர்)