நல்லதண்ணி நகரில் அதிகளவில் காட்டு பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அங்கு உள்ள விருந்தினர் விடுதிகளிளும், குடியிருப்பு பகுதியிலும், நகரிலும் இவ்வாறு பன்றிகளின் நடமாட்டம் உள்ளது. நல்லதண்ணி நகரில் உள்ள அனைத்து இல்லங்கள், விருந்தினர் விடுதி, வர்த்தக நிலையங்களில் உள்ள கழிவு பொருட்களில் உள்ள உணவுகளை உண்ண வருகிறது. இவ்வாறு வரும் காட்டு பன்றிகள் சில நேரங்களில் விருந்தினர் விடுதி வர்த்தக நிலையங்கள் குடியிருப்புகளுக்கு உள்ளே சென்று அங்கு உள்ள உணவு பொருட்களை உண்ணும் நிலையில் உள்ளது என அப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் காலங்களில் சிவனடி பாதமலை பருவகாலம் ஆரம்பித்தவுடன் இங்கு யாத்திரிகர்கள் வருகை ஆரம்பித்தால் மேலும் பன்றிகள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இதனால் மக்களுக்கு தீங்கு ஏற்படும் அபாயமும் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் நகர் மக்கள்.
(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்)நல்லதண்ணி நகரில் பன்றிகள் நடமாட்டம்
169