Thursday, April 25, 2024
Home » யாழ். பாடசாலையொன்றில் 23 வருடங்களுக்கு பின்னர் மாணவியொருவர் சித்தி

யாழ். பாடசாலையொன்றில் 23 வருடங்களுக்கு பின்னர் மாணவியொருவர் சித்தி

by damith
November 20, 2023 5:55 am 0 comment

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், 23 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவி ஜஸ்ரின் ஜனனி 160 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.

2000 ஆண்டிற்கு பின்னர் இம் முறைதான் மாணவியொருவர் சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமைச் சேர்த்துள்ளார்.

பாடசாலைக்குத் தனது ஒழுங்கான வரவு, அதிபர் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் விடா முயற்சியே தனது வெற்றிக்குக் காரணமென குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்குத் தோற்றிய நான்கு மாணவர்களில் மாணவன் ஒருவன் 144 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT