Friday, April 19, 2024
Home » வட மத்திய மாகாண நூலக கட்டடம் திறந்து வைப்பு

வட மத்திய மாகாண நூலக கட்டடம் திறந்து வைப்பு

by damith
November 20, 2023 11:02 am 0 comment

வடமத்திய மாகாணத்தில் சிறந்த நூலகம் மற்றும் தகவல் சேவையை பேணும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட வடமத்திய மாகாண மத்திய நூலக கட்டடம் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தலைமையில் தம்புத்தேகம நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த நூலகக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக வடமத்திய மாகாண சபை 85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான நிலம் மகாவலி அதிகார சபையினால் அன்பளிப்பு செய்யப்பட்டமை விசேட அம்சமாகும். இந்த நூலகத்தை நிறுவுவதன் முக்கிய நோக்கம் தம்புத்தேகம நகரைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள், கல்வி வலய அலுவலகம், பொலிஸ், மகாவலி அதிகாரசபை, பிரதேச செயலகம், தபால் நிலையம் போன்ற தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துவதாகும்.

இந்நிகழ்வில் ​​வடமத்திய மாகாண பிரதம செயலாளர் சந்திரசிறி பண்டார, பிரதான அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(கல்நேவ தினகரன் விசேட நிருபர் )

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT