Friday, March 29, 2024
Home » 182 புள்ளிகள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடம்
பாணந்துறை அல் பஹ்ரியா மாணவி

182 புள்ளிகள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடம்

by damith
November 20, 2023 5:55 am 0 comment

பாணந்துறை அல்பஹ்ரியா தேசிய பாடசாலை மாணவி எம்.ஆர். பாத்திமா ஸைனப் அண்மையில் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில்-2023 தமிழ் மொழி மூலமாக 182 புள்ளிகள் பெற்று கோட்டக் கல்விப் பிரிவில் முதலாமிடத்தையும் களுத்துறை மாவட்டத்தில் மூன்றாம் நிலையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் அல்பஹ்ரியா தேசிய பாடசாலையின் ஆங்கில ஆசிரியராக கடமை புரியும் பாத்திமா ரிஸ்னா மற்றும் முஹம்மத் ரியாஸ் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியாவார். இந்த மாணவி தனது பரீட்சை வெற்றி தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்; தனது கல்விப் பயணத்தில் உறுதுணையாக இருந்து நெறிப்படுத்தி வழிகாட்டிய பெற்றோர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும் மற்றும் கல்வி அபிவிருத்திக்காக செயல்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

( பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT