Friday, March 29, 2024
Home » நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

- சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

by Rizwan Segu Mohideen
November 17, 2023 7:54 am 0 comment

– ஒரு சில கரையோரப் பகுதிகளில் காலையில் மழை

இன்றையதினம் (17) நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென, வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்தின் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழைக்கு சாத்திம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும் வட மாகாணத்திலும் காலை வேளையில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT