Saturday, April 20, 2024
Home » சம்பள உயர்வு, தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து செந்தில் தொண்டமான் கலந்தாய்வு

சம்பள உயர்வு, தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து செந்தில் தொண்டமான் கலந்தாய்வு

by Rizwan Segu Mohideen
November 19, 2023 10:18 am 0 comment

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின், பதுளை, பசறை, மடூல்சீமை, லுணுகல பிரதேசங்களைச் சேர்ந்த தலைவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் புதிய சம்பள உயர்வு முன்மொழிவுகள் மற்றும் தற்போதைய தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் அசோக்குமார், சிவலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கணேசமூர்த்தி மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் இ.தொ.காவின் அமைப்பாளர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT