Home » பாராளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை பரிசீலிக்க நாமல் உள்ளிட்ட மேலும் 8 பேர்

பாராளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை பரிசீலிக்க நாமல் உள்ளிட்ட மேலும் 8 பேர்

- மாகாண சபை தேர்தலுக்கும் மேலதிகமாக 8 பேர் நியமனம்

by Rizwan Segu Mohideen
November 19, 2023 12:04 pm 0 comment

“பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்)” சட்டமூலத்தின் பரிசீலனைக்கென நிலையியற் கட்டளையின் 113(2) இன் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை தான் மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

சபாநாயகர் நேற்றையதினம் (18) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, பிரசன்ன ரணதுங்க, சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, கஞ்சன விஜேசேகர, அநுராத ஜயரத்ன, சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, மயந்த திசாநாயக்க, ரோஹினீ குமாரி விஜேரத்ன ஆகியோர் அந்தக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

“மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” சட்டமூலத்தைப் பரிசீலிப்பதற்கு நியமிக்கப்பட்ட மேலதிக உறுப்பினர்கள்

“மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென நிலையியற் கட்டளையின் 113 (2) இன் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதற்கமைய, சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, ஜானக வக்கும்புர, இம்தியாஸ் பாகிர் மாகார், ஆர்.எம். ரஞ்சித் மத்தும பண்டார, இரான் விக்ரமரத்ன, இசுரு தொடங்கொட, எம்.டப்ளியூ.டீ. சஹன் பிரதீப் விதான, டீ. வீரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT