Thursday, March 28, 2024
Home » வாகன விபத்தில் மருதமுனை இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு

வாகன விபத்தில் மருதமுனை இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு

- பிரதேசம் முழுவதும் சோகத்தில்

by Rizwan Segu Mohideen
November 18, 2023 4:19 pm 0 comment

மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஒலுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்தச் செய்தி முழு மருதமுனை பிரதேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மருதமுனையில் இருந்து ஒலுவில் பிரதேசத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இரு இளைஞர்களும் மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றவர் கல்முனை அஷ்ரப் ஞாபகத்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் 19 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என்பதுடன் இவர்கள் இம்முறை உயர்தர பரீட்சை எழுதுவதற்கு தயாராக இருந்த மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மருதமுனை -3, ஸம்ஸ் ஸம் வீதியில் வசித்து தமீம் அதான் மிப்ரித், மருதமுனை பிரதான வீதி, ரிபாய் அமர் அவ்ஜ் ஆகிய இரு இளைஞர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இளைஞர்களின் உடல்கள், மரண விசாரணை அறிக்கையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு இன்று (18) காலை 7.00 மணிக்கு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன. இதில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT