Friday, March 29, 2024
Home » நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே பிற்பகலில் மழை

நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே பிற்பகலில் மழை

- மத்திய, சப்ரகமுவ, ஊவா உள்ளிட்ட பகுதிகளில் 100 மி.மீ. வரை மழை

by Rizwan Segu Mohideen
November 19, 2023 9:19 am 0 comment

இன்றையதினம் (19) நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் குருணாகல், மன்னார் மாவட்டங்களிலும் 100 மி.மீ. வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT