Friday, April 19, 2024
Home » நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த ரூ.22 கோடி
வர்த்தக நிலையங்களில் விதித்த அபராதம்

நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த ரூ.22 கோடி

by sachintha
November 17, 2023 6:45 am 0 comment

நாடளாவிய ரீதியில் இவ்வருடம் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் பொருள் கொள்வனவு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 22 கோடி ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், பதுக்கல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி முதல் அக்டோபருக்கிடையில், இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுமார் 22,000 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டதில் 19,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை கூறியுள்ளது. பொலன்னறுவை மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் (15) மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட பல சுற்றிவளைப்புக்களில், 04 இலட்சம் ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT