Thursday, April 25, 2024
Home » இ.தொ.கா உயர்மட்டக் குழு திங்கள் கொழும்பில் சந்திப்பு
தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு விடயம்

இ.தொ.கா உயர்மட்டக் குழு திங்கள் கொழும்பில் சந்திப்பு

by sachintha
November 17, 2023 8:09 am 0 comment

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழு சந்தித்து ஆராயவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நேற்று கொழும்பு சௌமியபவானில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு, தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி வருமானத்தின் அடிப்படையிலும், வாழ்க்கை செலவுப் புள்ளியின் அடிப்படையிலும் வழங்கப்பட வேண்டுமென்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு விடயத்தில், பெருந்தோட்ட தொழில் அமைச்சு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லையென இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழில் அமைச்சு அலட்சிய போக்கை காட்டி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, எதிர்வரும் காலத்தில், நேரடியாக பெருந்தோட்ட முதலாளிமார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார். இதன்போது, முதலாளிமார் சம்மேளனம், இணக்கம் ஒன்றுக்கு வர மறுத்தால், காங்கிரஸ் தமது தொழிற்சங்க போராட்டங்கள் மூலம், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய வேதனத்தை பெற்றுக்கொடுக்கும் என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT