இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட பிரிவு மூன்று கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி அணி முதல் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. காரைதீவு விபுலானந்த தேசிய பாடசாலை மைதானத்தில் தொடரின் முதலாவது சுற்றின் முதலாவது போட்டியில் ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை அணியை கல்முனை ஸாஹிறா எதிர்கொண்டது.
முதலில் துடுப்படுத்தாடிய ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை அணி 23.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 59 ஒட்டங்களை பெற்றது. பதிலெடுத்தாடிய கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி அணி 6.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 60 ஓட்டங்களை எட்டியது.
மாளிகைக்காடு குறூப் நிருபர்