Thursday, April 18, 2024
Home » நெடுந்தீவில் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்பு

நெடுந்தீவில் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்பு

by Prashahini
November 15, 2023 11:38 am 0 comment

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் 750 இற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் நேற்று (14) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவு கிழக்கு 15 வட்டாரம் பகுதியில் மக்கள் நடமாற்றம் இல்லாத தனியார் காணியில் குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள நெடுந்தீவு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றனர்.

அனுமதி கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து நடாத்திய தேடுதலில் ரி 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 750 இற்கும் மேற்பட்ட ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நெடுந்தீவில் தொடரும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலையில் முடிவுறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT