Thursday, March 28, 2024
Home » பட்டப் பகலில் பலர் முன்பாக வாள் வெட்டு

பட்டப் பகலில் பலர் முன்பாக வாள் வெட்டு

களுத்துறையில் பரபரப்புச் சம்பவம்

by Gayan Abeykoon
November 15, 2023 1:15 am 0 comment

ளுத்துறை நகர் மத்தியில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் நபர் ஒருவர் வாளால் வெட்டப்பட்டுள்ளார். வாளால் வெட்டிய இந்நபரைத் தேடி, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

நபர் ஒருவர் மீது நேற்று முன்தினம் (13) பிற்பகல் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்கப்பட்டவர் நகர் மத்தியில் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.இதன்போது களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு இவர் கொண்டு செல்லப்பட்டார். அவரது கைகளிலும் முதுகிலும் மூன்று காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவரது நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்த தாக்குதல் இடம்பெற்றது.

தாக்குதலுக்குள்ளானவர் வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எனவும், அவர் தனியார் பஸ் நடத்துநர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT