அனைத்திந்திய அ.தி.மு.கவின் 52ஆவது ஆண்டு பொன்விழாவையொட்டி அகில இலங்கை எம். ஜீ.ஆர். மன்றம் ஏற்பாடு செய்துள்ள விஷேட நிகழ்வு எதிர்வரும் 2023.11.19ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு 11, பழைய நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.சட்டத்தரணி ரஷித் எம் இம்தியாஸ் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்வில் அகில இலங்கை எம்ஜிஆர் மன்றத்தின் தலைவர் கலாநிதி எஸ்.எச்.எம். இதிரிஸ் வரவேற்புரை ஆற்றவுள்ளார். கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் எம். டீ. எம். இக்பால், தொழில் அதிபர்களான அ. முத்தப்பன் செட்டியார், எட்மண்ட் பெர்னாண்டோ, ஜே.பி. ஜெயராம், தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர், தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம உதவி ஆசிரியர் கே. ஈஸ்வரலிங்கம், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் குமரகுருபரன், மக்கள் தொடர்பு அதிகாரி எம். சீ. எம். அலி, நெய்னார் காப்பகத் தலைவர் இம்ரான் நெய்னார், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஜோசப் பெனார்ந்து, சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் துரைராசா சுரேஸ், கவிஞர் பிரேம்ஜி, தென்றல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அபு உபைத் மவ்ஜித், அச்சக உரிமையாளர் தேவர் முனிவர், ஏ. ஆர்.எம். ரிஸ்வி, ஓம் சரவணா புரடக்ஷன் அதிபர் எஸ். நடராஜா, தெலுங்கு காங்கிரஸ் தலைவர் அ. அன்பழகன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்வார்கள்.
கலாநிதி இதிரிஸ் தலைமையில் அ.இ அ.தி.மு.கவின் பொன்விழா
59
previous post