81
சென்னையிலிருந்து யாழ்.நோக்கி வந்த விமானம், மோசமான காலநிலை காரணமாக பலாலி விமான நிலையத்தில் தரையிறங்காது மீண்டும் சென்னைக்கு திரும்பியது.
சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து,திங்கட்கிழமை யாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானமே, தரையிறங்காது மீள சென்னைக்கு திரும்பியது.
விமானத்தில் 24 பயணிகள் இருந்ததாகவும், அவர்களுக்கான மாற்று பயணச்சீட்டுகளுடன் பயண ஏற்பாடு செய்யப்பட்டதாக வும் தெரிவிக்கப்படுகிறது.