Home » களுவாஞ்சிகுடியில் ஐந்து கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி

களுவாஞ்சிகுடியில் ஐந்து கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி

by Gayan Abeykoon
November 15, 2023 1:06 am 0 comment

ட்டக்களப்பு, மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி கிராமத்தில் ஐந்து கிலோமீற்றர் வீதிகளுக்கு காபட் இடப்பட்டு புனரமைப்பு பணிகள் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி கிராம மக்கள் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க வீதி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வீதி புனரமைப்பு வேலைத்திட்டங்களை வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிரதிநிதியாக கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 (பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT